தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை உலர்ந்தது : 2 கப்
து.பருப்பு : 1 தேக்கரண்டி
சீரகம் : 1 தேக்கரண்டி
மிளகு : 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் : 2
தனியா : 1 தேக்கரண்டி
சுண்டைவற்றல் : 6
சுக்கு பொடித்தது : சிறிதளவு
பெருங்காயம் : சிறிதளவு
உப்பு : தேவையான அளவு
கறிவேப்பிலையை நன்கு நீரில் கழுவி பின்பு நிழலில் உலர்த்தவும். நன்கு நிழலில் உலர்த்தியபின்பு எடுத்து எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். மற்ற எல்ல பொருட்களையும் தனித்தனியாக வருத்து எடுக்கவேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் ஒன்றாக அரைத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து சூடான சாதத்தில் போட்டு பிசைந்து தினமும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை உண்பதால் ஏற்படும் நன்மைகள்
1.பசியைத் தூண்டும்
2.உடலை வலுவாக்கும்.
3.குடல் வாயுவை வெளியேற்றும்.
4.கண் பார்வை தெளிவடையும்.
5.இரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இரத்தசோகை மாறும்.