அனைவருக்கும் எளிதாக குறைந்த விலையில் கிடைக்ககூடிய ஒரே காயகற்ப மூலிகை நெல்லியை நன்றாக உலர்த்தியபின் கருப்பு நிறமாக மாறும். இதற்கு நெல்லி முள்ளி பெயர்.
நெல்லி கண்களுக்கு குளிர்ச்சி தரும். ஜீரண சக்தியை தூண்டும். சிறுநீர் பெருக்கியாக செயல்படும். குடல் வாயுவை அகற்றும். பேதியைத் தூண்டும். உடல் சூடு தணிக்கும்.எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெல்ல, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றை குணமாக்கும்.
நெல்லி வேர்:
வாந்தி, ருசியின்மை, மலச்சிக்கல், ஆகியவற்றை குணமாக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும். இருமல், சளி, போன்றவற்றைக் குறைக்கும். உடலை பலப்படுத்தும். நெல்லிக்காய் தைலம் தேய்த்து தலை முழுகினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். பொடுகு கட்டுப்படும் முடி உதிர்தல் தடுக்கப்படும்.