சித்தர்கள் அனைவரும் காயகற்ப மூலிகைகள் பற்றி அதிகம் கூறியுள்ள போதிலும் போகர் சப்த காண்டம் 7000-த்தில் கூறப்பட்டுள்ள காயகற்ப மூலிகைகள் மிகவும் சிறப்புடையது. அவற்றுள் மிகச் சிறப்பு வாய்ந்தது கரிசலாங்கண்ணி.
“கேளப்பா கரிசாலைக் குப்பைமேனி
உன்னப்பா மண்டலந்தான் நோய்மூன்று போம்!”
வாத, பித்த, கப மாறுபாட்டால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் கரிசலையை ஒரு மண்டலம் உண்டால் விலகும் என்பது இப்பாடலின் பொருள்.கரிசல் என்பது தங்கத்தைக் குறிக்கும். மேனிக்கு பொன்னிறத்தை தரும் மூலிகை என்று பொருள். இது கையாந்த கீரை, கரிக்கை, கரிசாலை என்றும் கூறலாம். இதில் நான்கு வகைகள் உள்ளன. நீளம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை. இவற்றுள் எங்கும் கிடப்பது வெள்ளை கரிசலாங்கண்ணி மட்டுமே. மஞ்சள் கரிசலாங்கண்ணியை பொற்றலைக்கையான் என்று அழைப்பார்கள். இதனை ஒரு மண்டலம் உட்கொண்டால் சருமம் பொன்னிறச் சாயை பேரும் என்பதால் இதற்கு இந்தப் பெயர்.