தற்சமயம் முகத்திர்ற்கு உபயோகிக்கப்படும் பலவிதமான கிரீம்கள் செயற்கையான அழகை கொடுக்கின்றன. அதனால் வரும் பக்க விளைவுகள் ஏராளம். எந்த ஒரு பக்கவிளைவுகளற்ற மூலிகை மருந்துகளை கொண்டு செய்யப்படும் கிரீம்கள் மிக மிக குறைவு. அதனால் நம் வீடுகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சுலபமான முக பூச்சை நாமே தயாரித்துக் கொள்ளலாம்.
முகப்பூச்சு தயாரிக்க தேவையான பொருட்கள் :
மகிழம் பூ – 100 கிராம்
கிச்சலிக் கிழங்கு- 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
கோரைக் கிழங்கு – 50 கிராம்
சந்தனத்தூள் – 50 கிராம்
மேற்சொன்ன ஐந்து பொருட்களையும் சுத்தம் செய்து பொடித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சிறிதளவு எடுத்து பன்னீரில் கலந்து முகம் மற்றும் கழுத்து, கை, கால், பகுதிகளில் குளிப்பதற்கு முன் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் குளிக்கலாம்.
இதே போல் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் கருமை நீங்கி பளபளப்பு ஏற்படும்.முகத்தை சுத்தம் செய்வதோடு வழவழப்பு தன்மையை முகம் பெற்று புத்துணர்ச்சி ஏற்படும்.