தேவையான பொருட்கள்:
இஞ்சி: 50 கிராம்
புளி : சிறிதளவு
காய்ந்த மிளகாய் : 2
உளுத்தம் பருப்பு : 2 தேக்கரண்டி
மிளகு : 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்: 1/4 தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் : 10
உப்பு : தேவையான அளவு
நல்லெண்ணெய் : சிறிதளவு
செய்முறை:
இஞ்சி மேல் தோலை நீக்கி நன்கு கழுவ வேண்டும். பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். பாத்திரத்தில் நல்லெண்ணையை விட்டு காய்ந்ததும், மிளகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், அதனுடன் இஞ்சி துண்டுகளை போட்டு சிவக்க பொரிக்கவும், எண்ணெயிலுருந்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் சாம்பார் வெங்காயத்தை நறுக்கி சிறிது புளி சாறு விட்டு கொதித்த பின் மிக்ஸியில் அரைத்து வைத்த பொடியையும், சிறிது சாம்பார் பொடியும், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி சூடாக்கி பரிமாறவும்.
மருத்துவப்பயன்கள்:
1. அஜீரணக் கோளாறுகளை சரி படுத்தும்.
2. பசியைத் தூண்டும்.
3. வாந்தி, குமட்டல் போன்றவற்றைக் குறைக்கும்.
4. வாயுத் தொல்லைகள் நீங்கும்.
5. முட்டி வீக்கம், மூட்டு வலி தீரும்.