மூலிகை பூச்சிவிரட்டி (முறை 1)
தேவையானவை:
ஆடு தீண்டா இலைகள் -10 கிலோ, கோமியம் – 10லிட்டர், தண்ணீர் 200 லிட்டர்
செய்முறை:
ஆடு தீண்டா இலைகள், கோமியம், தண்ணீர் அனைத்தையும் ஒன்றாக கலந்து 7 நாட்கள் ஊற வைக்கவும்.
பயன் மற்றும் பயன்படுத்தும் முறை:
பூச்சிவிரட்டியாக பயன்படுத்தலாம். 1 லிட்டர் மூலிகை பூச்சுவிரட்டியுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்.
மூலிகை பூச்சிவிரட்டி (முறை 2)
தேவையானவை:
வேப்பம் கொட்டைதூள் 5 கிலோ, கோமியம் 12லிட்டர், தண்ணீர் 10 லிட்டர், எலுமிச்சை பழம் துண்டு 4
செய்முறை:
அனைத்தையும் ஒன்றாக கலந்து 3 நாட்கள் ஊற வைக்கவும்.
பயன் மற்றும் பயன்படுத்தும் முறை:
பூச்சிவிரட்டியாக பயன்படுத்தலாம். 2 லிட்டர் மூலிகை பூச்சிவிரட்டியுடன் 11 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்.
மூலிகை பூச்சிவிரட்டி (முறை 3)
தேவையானவை:
குசப்பு (வேப்பிலை, நொச்சி, புங்கன்), பால் தன்மை (எருக்கன், பப்பாளி), வாசனை தன்மை (கொய்யா, துளசி) கொட்டைதூள் 5 கிலோ, கோமியம் 12 லிட்டர், தண்ணீர் 10லிட்டர், எலுமிச்சை பழம் துன்டு 4.
செய்முறை:
அனைத்தையும் ஒன்றாக கலந்து 3 நாட்கள் ஊற வைக்கவும்.
பயன் மற்றும் பயன்படுத்தும் முறை:
பூச்சிவிரட்டியாக பயன்படுத்தலாம். 2 லிட்டர் மூலிகை பூச்சிவிரட்டியுடன் 11 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்.
இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் பூச்சிவிரட்டி
தேவையானவை:
இஞ்சி 250 கிராம், பூண்டு 500 கிராம், பச்சை மிளகாய் 500 கிராம், கோமியம் 1 லிட்டர், தண்ணீர் 10 லிட்டர்
செய்முறை:
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் நன்கு அரைத்து கோமியத்தில் 1 நாள் ஊரவைக்க வேண்டும்.
பயன் மற்றும் பயன்படுத்தும் முறை:
பூச்சிவிரட்டியாக பயன்படுத்தலாம் (மல்லிகை). 300 மில்லி கரைசலுடன் 10 லிட்டர்; தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்.
சீதாப்பழம், வேம்பு, மிளகாய் கரைசல் பூச்சிவிரட்டி
தேவையானவை:
சீதாப்பழம் இலை 30 கிராம், காயந்த மிளகாய் (1 நாள் ஊறவைத்தது) 15 கிராம், வேப்பம் பழம் கரைசல் 15 கிராம், தோவையன அளவு காதிசோப்.
செய்முறை:
1 லிட்டர் தண்ணீரில் சீதாப்பழம் இலையை காய்ச்சி கசாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் அரைத்த மிளகாய் மற்றும் வேப்பம்பழ கரைசலையும் சேர்த்து தெளிக்கவேண்டும்.
பயன் மற்றும் பயன்படுத்தும் முறை:
பூச்சிவிரட்டியாக பயன்படுத்தலாம் (ஆனைகொம்பன்).
பென்னியம்
தேவையானவை:
வேப்பம் எண்ணெய் 450 மில்லி, புங்கன் எண்ணெய் 450 மில்லி, காதிசோப் 100 கிராம்
செய்முறை:
அனைத்தையும் ஒன்றாக கலந்து பயன்படுத்தவும்
பயன் மற்றும் பயன்படுத்தும் முறை:
பூச்சிவிரட்டியாக பயன்படுத்தலாம். 300 மில்லி கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்.
வேப்பம் கொட்டை பூண்டு கரைசல்
வேப்பம் கொட்டை – 5 கிலோ, காரமான வெள்ளைபூண்டு 500 கிராம், இரண்டையும் ஆட்டு உரலில் இட்டு இடித்து காட்டன் துணியில் இறுக்கமாக கட்டி 10 லிட்டர் மாட்டு சிறுநீரில் 24 மணிநேரம் ஊற வைத்தால் கரைசல் தயார். 500 மில்லி கரைசலுடன் 10லிட்டர் நீர் சேர்த்து மாலை வேளையில் தெளித்தால். செம்பேன், சாறு உறிஞ்சும் பூச்சிர்கு உகந்தது.
பச்சை மிளகாய் பூண்டு கரைசல்
காம்பு நீக்கப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாய் அரைத்து 3 லிட்டர் தண்ணீரில் 24மணி நேரம் வைக்கவேண்டும். 250 கிராம் வெள்ளைபூண்டு இடித்து 100 மில்லி மண்ணெண்ய் 24 மணி நேரம் வைக்கவேண்டும். பிறகு இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் சேர்த்து 100 கிராம் காதிசோப் சேர்த்து கலந்துவிடவும். 500மில்லி கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தெளிக்க வேண்டும்.
பயிறு கரைசல்
தட்டைபயிறு, உளுந்து, பாசிப்பயிறு, கோதுமை, கம்பு, ராகி ஆகியவற்றை தலா 100 கிராம் வீதம் எடுத்து 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அவற்றை தண்ணீர் விட்டு சாறு எடுக்கவேண்டும். இவற்றுடன் 3 லிட்டர் இளநீர் கலந்து மேலும் தண்ணீர் விட்டு அதை 10 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கலந்து பூ பூக்கும் மற்றும் காய் முற்ற ஆரம்பிக்க போதும் தெளிக்க வேண்டும். கல்யாணப்பூசணி சாகுபடியில் இவ்வாறு செய்கிறார்கள்.