தேவையான பொருட்கள்:
கொள்ளு – 100 கிராம்
சுக்கு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
கொள்ளு 100 கிராம் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வேண்டும். பின்பு தண்ணீர் விட்டு வேகா விடவும். வெந்தது தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். திப்பிலியை வெறும் வாணலியில் வறுத்து, சுக்கு, மிளகுடன் சேர்த்து மிக்சியில் கரகரப்பாகப் பொடிக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தவுடன் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுக்கவும். புலி கொதித்த தண்ணீரையும், கொள்ளு வேகவைத்த தண்ணீரையும் சேர்க்கவும். பொடித்து வைத்து இருக்கும் பொடியை போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.பின்பு எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து அதில் விடவும்.
பயன்கள்:
1. அதிக கொழுப்பு, ஊளைச்சதை ஆகியவை குறையும்.
2. உடல் பொலிவு பெரும்.
3. உடல் பருமன் குறையும்.